Abdulthink

Monday, September 20, 2010

இப்படிக்கு உன் கணவன்..

அணுதினமும்
மனு ஒன்று வைப்பாய்;
எவ்வளவு பிடிக்கும் என்னை!

பழகிப்போன வினா;
ஆனாலும்
சிரித்தப்படியே உரைப்பேன்
நிறைய என்று!

என்றுமே நீ கேட்ட பதில்தான்;
இருந்தாலும் உன்
சில்லறை சிரிப்புகள்
சிலுசிலுக்கும் என்னை
குதுகலிக்கும்!

கதைத்து முடித்ததும்
நெஞ்சம் கனக்கும்
படுத்ததும் வெடிக்கும்!

காதோடு ஏதோ
கண்ணீர்
கிசுகிசுக்கும் முடிந்ததும்
கன்னம் பிசுபிசுக்கும்!

துக்கத்திலே
தூங்கிப்போனது தெரியாது;
பதில் ஏதும் கிடையாது!

துண்டித்து துண்டித்து
கொடுக்கும் உன் அழைப்பை
கண்டிப்பேன்;
ஆனாலும் காத்திருப்பேன்
மீண்டும் தருவாயா என!

பேசும் நாளெல்லாம் இனிக்கும்
பேசாத நிமிடம் மட்டும் வலிக்கும்;
சண்டையிட்டாலும்
சரணடைந்துவிடுவோம்
இணைப்பை துண்டிப்பதற்குள்!

இப்படிக்கு
மடிக்கணினியுடன்
மல்லுக்கட்டும் உன்
கணவன்!

Source : itzyasa.blogspot.com

நான் மட்டும் தனியாக...

பட்டம் வாங்கியதும்
சுற்றித் திறிந்தேன்
இறக்கைக்கட்டி!

அடங்காப் பிள்ளையாக
இருந்தாலும் அம்மாவுக்கு
செல்லமாக!

கடவுச் சீட்டு கையில் வந்தது
கனவுகள் கலைந்தது
கடமைகள் பெருத்தது!

திட்டித் தீர்க்கும்
தந்தையோ
தட்டிக்கொடுத்தார்!

கொஞ்சும் அம்மாவோ
குழந்தையானாள்
அழுவதில் மட்டும்!

வம்புச் செய்யும்
தம்பியோ
தேம்பி தேம்பி அழுதான்!

அடிக்கடி அடிக்கும்
அக்காவோ
முத்தமிட்டால்;
நெஞ்சத்தை தொட்டுவிட்டாள்!

என்றுமே அழுத்தில்லை
அன்று நான் கண்டது
பாசம் எனை வென்றது;

தடுக்க முடியாமல்
தாரைத் தாரையாக
கண்ணீர் என்னைக் கடந்தது!

ஒட்டி உறவாடிய
நண்பர்களோ
கட்டித்தழுவி சென்றார்கள்!

இப்போது
நான் மட்டும் தனியாக
என்னைப் போல் இருப்பவர்கள்
இங்கே துணையாக!

வருமானத்திற்காக
வளைகுடாவில்
செரிமாணமாகத நினைவுகளுடன்;
ஊர்ச் செல்லும் கனவுகளுடன்!

Source : http://itzyasa.blogspot.com

Wednesday, September 15, 2010

இன்னொருக் குழந்தை ..

சிரித்துப்பேசும் நானோ சிலநேரம்
சினந்துக்கொள்வேன் உன்னைக்
கடிந்துக்கொள்வேன்!

இல்லாத துன்பத்தை
இழுத்துப் போர்த்திக்கொண்டேன்;
இல்லாள் உனை நான் சொல்லாலே
குத்தினேனோ!

பிறந்தவீட்டை விடுத்து என்னிடம்
பறந்த வந்த சொந்தமாய் நீ;
இனியும் உன்னை கடுகடுக்க மாட்டேன்
உன் கர்பக்காலத்தைக் கண்டப் பிறகு!

அல்லல்படும் அவதியிலும்
எனைக் கண்டு அழகாய் சிரித்தவள் நீயோ;
எல்லோரும் தூங்கினாலும்
எட்டி உதைக்கும் நம் பிள்ளையை
தொட்டுப்பார்க்க எனை எழுப்பும்
இன்னொருக் குழந்தை நீயோ!

இனி வெடிக்கும் கோபம் வந்தாலும்
நீ பிரசவத்தில் துடித்த கதறலை நினைப்பேன்;
உடைந்துப் போகட்டும் என் சினம்
வடிந்துப் போகட்டும் என் கனல்!

இனியொருமுறை வந்தாலும் ஈகோ
துரத்தியடிப்பேன் ச்சீ ச்சீ கோ கோ!

Source : http://itzyasa.blogspot.com

Tuesday, September 14, 2010

பொறையேறும் போது..

மெத்தையில் இருந்தாலும்
ஒத்தையாக நான்;
குளுக்குளு அறையில் இருந்துக்கொண்டே
குமுறிக்கொண்டிருக்கும் உள்ளம் மட்டும்!

கண்ணைத் திறந்துக்கொண்டேக்
கண்காணாத் தேசத்தில்;
விழிமுழுவதும் நீரோடு - உன்னை
விழிக்காண்பது எப்போது!

வருந்தாத நாளில்லை
வருமானத்தில் ஏற்றமில்லை;
வயசுள்ள காலமெல்லாம் பாலையோடு
வயசான காலத்தில் உன்னோடு!

பொய்யெனத் தெரிந்தாலும்
பொறையேறும் போது நினைத்துக்கொள்வேன்
உன் நினைவுதான் என்று!

சின்னச் சின்னச் சந்தோஷத்தோடு
சீக்கிரம் முடிந்திடாதா என் பாலை நாள்;
எதிர்பார்துக்கொண்டே இருக்கிறேன்
எப்போது நான் உன்னோடு வாழும் நாள்!!

Source : http://itzyasa.blogspot.com

Monday, September 13, 2010

புரியாத உன் பாசம்..

உன்னை அழைக்கும் போதே
குளிருதம்மா உள்ளம்;
கோடி நபர் இருந்தாலும்
உன் அன்பில் மட்டுமே இல்லாத கள்ளம்!

எப்போதும் விலக மாட்டாய் எனைவிட்டு
யாருக்கும் கொடுக்கமாட்டாய் என்னை விட்டு!
புரியாத உன் பாசம் புனிதமானது
புரிந்துக்கொள்ள மிகவும் அரிதானது!

காதோடு நரைவிழுந்தப்பின்னும் என்
காதைத் திருகும் உரிமை உனக்கு மட்டும்தான்;
பசிக்கவில்லை என புசிக்கமால் இருந்தாலும்
ஊட்டி விடும் உன் விரல் மருந்தால்
செரிமானம் ஆகும் உள்ளமும் சேர்ந்து!

தோளுக்குமேல் வளர்ந்தாலும் என்
தலை சாயும் உன் மடியில்தான்;
உன் பிரசவ வேதனையை உணர்ந்துக் கொண்டேன்
எனக்கொரு குழந்தைப் பிறக்கையிலே!

Source : http://itzyasa.blogspot.com

Tuesday, September 7, 2010

நீங்கள் செய்வதை உலகம் பார்க்கின்றது: கூகிளும் அதன் அபாயகரமான பிரைவசிக் கொள்கையும்..!

ணையத்தை பயன்படுத்த தெரிந்த ஒவ்வொருவரும் கூகிளையும் பயன்படுத்தி இருப்பார் என்றால் அது மிகையாகாது.

கூகிள் என்பது இன்று அனைவராலும் அறியப்பட்டது ஒன்று. அனால் அனைவராலும் அறியப்படாதது கூகிள் பிரைவசி பாலிசியின் (கொள்கை) உண்மை நிலவரம்.

பிரைவசி என்பதற்கு ஒரு நபரின் அந்தரங்கத் தகவல் – தனித்தகவல் – சுயத்தகவல் என்று என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள்.

கூகிளின் மென்பொருள்கள் இலவசமாக கிடைக்கின்றன, ஆனால் அதற்க்கான விலை என்ன தெரியுமா ? உங்களின் பிரைவசி.

கூகிளில் செய்யும் எதுவும் மற்றவர்கள் தெரிந்து கொள்ளும்படியே உள்ளது.

இதைப்பற்றி கூகிள் தலைவரிடம் கேட்க்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் “ஒரு விஷயத்தை மற்றவர்கள் அறிந்து கொள்ளக்கூடாது என்றல், முதலில் நீங்கள் அதை செய்திருக்கவே கூடாது” (கீழே காணொளியைக் காணவும்).

http://www.huffingtonpost.com/2009/12/07/google-ceo-on-privacy-if_n_383105.html

குகூல் நீங்கள் எந்தெந்த தளங்களுக்கு செல்கிறீர்கள், என்னன்ன சொற்க்களைத்தேடுகிறீர்கள், எதை டவுன்லோட் செய்கிறீர்கள் என அனைத்தையும் தனது தளத்தில் பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல், உங்களின் இ-மைல்கள் போன்றவற்றையும் அலசி ஆராயும் தன்மை கொண்டுள்ளதாக பல தன்னார்வ குழுக்கள் குற்றம் சாற்றுகின்றன.

டந்த வாரம் கூகிளுக்கு எதிரான பிரைவசி தொடர்பான வழக்கு ஒன்றிற்காக 40 கோடி நஷ்டஈடு கொடுக்க முன்வந்துள்ளது கூகிள் (http://arstechnica.com/tech-policy/news/2010/09/google-coughs-up-85-million-to-settle-buzz-privacy-suit.ars)

து மட்டுமல்ல மாற்றுமொரு தன்னார்வக்குழு கூகிளுக்கு எதிராக ஒரு விளம்பர பிரசாரத்தயே துவக்கி உள்ளது (காணொளியை கீலே காணலாம்).

http://www.youtube.com/watch?v=Ouof1OzhL8k


கூகிள் குரோம் என்ற கூகிளின் இணையதளச் சுற்றி (browser) நீங்கள் செய்யும் ஒவ்வொன்றையும் (நீங்கள் தட்டும் ஒவ்வொரு எழுத்தையும் கூட) கூகிளின் தாய்த்தளத்திற்கு அனுப்பி விடுகிறது (காணொளியை கீலே காணலாம்).

ந்த தகவல்கள் அங்கு பதிவு செய்வதுடன், இதை நிறுவனங்களுக்கு விற்பதாகவும் மேலும் இவற்றை அரசு கண்காணிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் பல தன்னார்வக்குழுக்கள் கூகில் மீது குற்றம் சாட்டியுள்ளது.

தை ஒப்புக்கொள்ளும் முகமாகவே கூகிளின் தலைவரின் கூற்றும் உள்ளது.

http://www.youtube.com/watch?v=ncerhCLi2o0

ஆகவே கூகிளை பயன்படுத்தும் போது இதை அறிந்து பயன்படுத்தவும், உங்களுடைய அந்தரங்க தகவல்கள், வேலை மற்றும் அலுவலக தகவல்கள், நிறுவனத்தின் முக்கிய மற்றும் தனித்தகவல்கள் போன்றவற்றை கூகிளில் பயன்படுத்தும் போது, எந்த வடிவத்தில் இருந்தாலும், சாட்டிங் ஆகவோ, புகைப்படமாகவோ, ஒலியாகவோ, ஒளியாகவோ, இ-மெயில் ஆகவோ, இந்த தகவல்கள் விற்கப்படலாம் அல்லது பகிர்ந்து கொல்லப்படலாம், உங்களது போட்டி நிறுவனங்களுக்குகூட இருக்கலாம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்..

செய்தி: எஸ் ஜாஃபர் அலி Phd (USA).

Sunday, September 5, 2010

பாலைவனப் பயணம்!

தூரமாக நீ இருந்தாலும்
சாரலாக நம் நினைவுகள்;
திகட்டாத நாளாய் நம்
திருமண நாளாம்!

தடவிய நறுமணம் மறைவதற்குள்
தாகத்துடன் பாலைவனப் பயணம்!
அவசர விடுப்பில்
அவசரமாய் திருமணம்!

முடித்து நாடு திரும்பினேன்
மூன்றே நாளில்;
தோய்ந்த முகமும்
துவண்டத் தோள்களும்
தள்ளாடும் நடையுடன் இங்கே நான்!

பலிக்கடாவாய் ஆக்கினேனோ உன்னை
பனியாய் கண்களில் முட்டும் உன் கண்ணீர்
பரிதவிக்க வைத்த பாலைவனப் என் பயணம்!

அலைப்பேசியில் அழைத்தாலும்
அதிகமாய் உன் அழுகைச் சப்தம் மட்டும்தான்!
கலையாத மருதாணியும் என்
கண்களில் நிற்க!

கேளியும் கிண்டலுமாய் இங்கே
புதுப் மாப்பிள்ளை என நண்பர்கள் கொறிக்க;
அழுதுக் கொண்டே சிரித்துக் கொண்டேன்
அயல் நாட்டின் அவலத்தை எண்ணி!!

Source : http://itzyasa.blogspot.com