Abdulthink

Monday, September 20, 2010

இப்படிக்கு உன் கணவன்..

அணுதினமும்
மனு ஒன்று வைப்பாய்;
எவ்வளவு பிடிக்கும் என்னை!

பழகிப்போன வினா;
ஆனாலும்
சிரித்தப்படியே உரைப்பேன்
நிறைய என்று!

என்றுமே நீ கேட்ட பதில்தான்;
இருந்தாலும் உன்
சில்லறை சிரிப்புகள்
சிலுசிலுக்கும் என்னை
குதுகலிக்கும்!

கதைத்து முடித்ததும்
நெஞ்சம் கனக்கும்
படுத்ததும் வெடிக்கும்!

காதோடு ஏதோ
கண்ணீர்
கிசுகிசுக்கும் முடிந்ததும்
கன்னம் பிசுபிசுக்கும்!

துக்கத்திலே
தூங்கிப்போனது தெரியாது;
பதில் ஏதும் கிடையாது!

துண்டித்து துண்டித்து
கொடுக்கும் உன் அழைப்பை
கண்டிப்பேன்;
ஆனாலும் காத்திருப்பேன்
மீண்டும் தருவாயா என!

பேசும் நாளெல்லாம் இனிக்கும்
பேசாத நிமிடம் மட்டும் வலிக்கும்;
சண்டையிட்டாலும்
சரணடைந்துவிடுவோம்
இணைப்பை துண்டிப்பதற்குள்!

இப்படிக்கு
மடிக்கணினியுடன்
மல்லுக்கட்டும் உன்
கணவன்!

Source : itzyasa.blogspot.com

நான் மட்டும் தனியாக...

பட்டம் வாங்கியதும்
சுற்றித் திறிந்தேன்
இறக்கைக்கட்டி!

அடங்காப் பிள்ளையாக
இருந்தாலும் அம்மாவுக்கு
செல்லமாக!

கடவுச் சீட்டு கையில் வந்தது
கனவுகள் கலைந்தது
கடமைகள் பெருத்தது!

திட்டித் தீர்க்கும்
தந்தையோ
தட்டிக்கொடுத்தார்!

கொஞ்சும் அம்மாவோ
குழந்தையானாள்
அழுவதில் மட்டும்!

வம்புச் செய்யும்
தம்பியோ
தேம்பி தேம்பி அழுதான்!

அடிக்கடி அடிக்கும்
அக்காவோ
முத்தமிட்டால்;
நெஞ்சத்தை தொட்டுவிட்டாள்!

என்றுமே அழுத்தில்லை
அன்று நான் கண்டது
பாசம் எனை வென்றது;

தடுக்க முடியாமல்
தாரைத் தாரையாக
கண்ணீர் என்னைக் கடந்தது!

ஒட்டி உறவாடிய
நண்பர்களோ
கட்டித்தழுவி சென்றார்கள்!

இப்போது
நான் மட்டும் தனியாக
என்னைப் போல் இருப்பவர்கள்
இங்கே துணையாக!

வருமானத்திற்காக
வளைகுடாவில்
செரிமாணமாகத நினைவுகளுடன்;
ஊர்ச் செல்லும் கனவுகளுடன்!

Source : http://itzyasa.blogspot.com